Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

35 வருஷமா லாட்டரி சீட்டு வாங்கிய முதியவர்.. 88-வது வயதில் அடித்த செம ஜாக்பாட்!

Trending

35 வருஷமா லாட்டரி சீட்டு வாங்கிய முதியவர்.. 88-வது வயதில் அடித்த செம ஜாக்பாட்!

பஞ்சாப் மாநிலம் தேரா பாசி பகுதியை சேர்ந்தவர் மஹந்த் துவர்க தாஸ். 88 வயதான இவர், கடந்த 35 வருடங்களாக லாட்டரி சீட்டு வாங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால், ஒருமுறை கூட பெரிய தொகை எதுவும் இவருக்கு கிடைத்ததில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை வாங்கிய மஹந்திற்கு, ரூபாய் 5 கோடி பரிசாக கிடைத்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அவர், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாட்டரி சீட்டில் இருந்து கிடைக்கும் பணத்தை எனது இரண்டு மகன்களுக்கு பிரித்துக் கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது பரிசாக கிடைத்துள்ள 5 கோடி ரூபாய் பணத்தில், 30 சதவீதம் வரியாக பிடித்துக் கொண்டு, மீதமுள்ள தொகை மஹந்திற்கு கொடுக்கப்படும் என்று, லாட்டரி குலுக்கல் நடத்திய துணை இயக்குநர் கரம் சிங் தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என்று சொல்லவே முடியாது என்பதற்கு, இந்த ஒரு சம்பவமும் உதாரணமாக மாறியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top