ஓசூர் அருகே வெறிநாய் கடித்து 3 வயது குழந்தை உட்பட 9 பேர் காயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடித்ததாக 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒசூர் அடுத்த தொட்ட மெட்டரை, சின்ன மெட்டரை, பந்தரப்பள்ளி ஆகிய கிராமங்களில் வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்றோர், விளையாடி வந்த குழந்தைகள் பெண்கள் என காண்போரை கடித்து குதறியதில் 3 வயது குழந்தை, மாணவிகள், பெரியோர் என 9 பேர் ரத்த காயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் குழந்தையின் கண் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்து குதறிய காயத்தை பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் உள்ளது.

வெறிநாயை கிராம மக்கள் அடித்து கொன்றதாக கூறப்படும் நிலையில், ஒரு நாயால் 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News