அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரண்டு படகுடன் 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி தமிழக மீனவர்களைச் கைது செய்யும் போக்கு தொடர்ந்து வருகிறது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு படகையும் அதிலிருந்து ஒன்பது மீனவர்களையும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News