Connect with us

Raj News Tamil

கல்லூரி மாணவி கத்தியால் குத்திய 9ம் வகுப்பு மாணவன் கைது!

தமிழகம்

கல்லூரி மாணவி கத்தியால் குத்திய 9ம் வகுப்பு மாணவன் கைது!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பரதேசிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மோனிஷா ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் மோனிஷாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மோனிஷாவின் வீட்டுக்கு வந்த சிறுவன் வீட்டில் இருந்த செல்போனை திருட முயற்சித்துள்ளான்.

இதனை கண்ட மோனிஷா, சிறுவனை கண்டித்ததோடு சிறுவனின் பெற்றோரிடமும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் மோனிஷாவை பழிவாங்குவதற்காக நேற்று இரவு மோனிஷாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த மோனிஷாவின் பாட்டியையும் சிறுவன் தாக்கி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

இதில், மோனிஷாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மோனிஷாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top