Connect with us

Raj News Tamil

ஒழுங்கா படி…கண்டித்த பெற்றோர்..தற்கொலை செய்துகொண்ட 9 ம் வகுப்பு மாணவன்..!

தமிழகம்

ஒழுங்கா படி…கண்டித்த பெற்றோர்..தற்கொலை செய்துகொண்ட 9 ம் வகுப்பு மாணவன்..!

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரிஷி (வயது 15). இவர், எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் குளியல் அறைக்குள் சென்ற ரிஷி நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த அவனுடைய பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரிஷி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரிஷி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரிஷிக்கு சரியாக படிப்பு வராததால் ஒழுங்காக படிக்கும்படி அவரது பெற்றோரும், உறவினர்களும் கூறினர்.

இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top