கர்ப்பமாக இருந்த மகள்.. இருப்பினும் விடாத தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

உத்தரபிரதேச மாநிலம் கெடிம்பூர் மதியா கிராமத்தை சேர்ந்தவர் நவ்ஷாத். இவருக்கு திருமணமாகி, இளம் வயதில் மகள் ஒருவர் உள்ளார். நவ்ஷாத்தின் மகள் இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவருடன் நெருக்கமாக பழகியதில் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த நவ்ஷாத், தனது மகளை அடித்து உதைத்துள்ளார். இருப்பினும், ஆத்திரம் தீராமல், கழுத்தை நெறித்து அவரை கொலை செய்துள்ளார். இதையடுத்து, உடலை எடுத்து ஆற்றில் வீசிய அவர், மகள் காணாமல் போனதாக வீட்டில் நாடகமாடியுள்ளார்.

பின்னர், உறவினர்கள் அனைவரும் சேர்ந்து, காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், நவ்ஷாத் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து, தங்களது பாணியில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நடந்தவற்றை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர், நவ்ஷாத்தை காவல்துறையினர் கைது செய்தனர். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான மகளை, தந்தை கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News