ருத்ரன் திரைப்படத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவரது இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில், ருத்ரன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த படத்தின் ரிலீஸ்-க்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. அதாவது, இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமையை ரெவன்ஸா என்ற நிறுவனம் கைப்பற்றியது. இதற்காக, 12.5 கோடி ரூபாய்-க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, முன்பணமாக 10 கோடி ரூபாயை பைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றிருந்தார்.

ஆனால், திடீரென 14.5 கோடி ரூபாய்க்கு தான் இந்தி டப்பிங் உரிமை விற்கப்படும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இதனால், ரெவன்ஸா நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏப்ரல் 24-ஆம் தேதி வரை படம் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News