Connect with us

Raj News Tamil

ரஷ்யாவுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட 7ஜி நாடுகள்!

உலகம்

ரஷ்யாவுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட 7ஜி நாடுகள்!

உக்ரைன் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யா, சண்டையில் கைப்பற்றிய அந்நாட்டின் 4 நகரங்களை அண்மையில் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

அத்துடன் போர் தாக்குதல்களையும் வேகப்படுத்தியுள்ள ரஷ்யா, உக்ரைனின் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதனை ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது. அணுஆயுதங்களை பயன்படுத்தினால், போர் குற்ற தொடர்பான சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு இலக்காக நேரிடும் என்றும், ஜி-7 நாடுகள் ரஷ்யாவை எச்சரித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா இணைத்ததை கண்டித்து ஐ.நாவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பை ரகசியமாக நடத்தும்படி ரஷ்யா கூறிய நிலையில், வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று இந்தியா உள்பட 107 நாடுகள் ஓட்டளித்துள்ளன. இதனால் ரஷ்யான் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top