இறந்த பிறகும் உதவி செய்த மனோபாலா!….நெகிழ்ச்சி சம்பவம்!

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமைக் கொண்டவர் மனோபாலா. இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக, காலாமானார். இவரது மறைவுக்கு, திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

பொதுமக்கள், ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட மனோ பாலாவின் உடல், நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், இறந்த பிறகும், மனோபாலா, தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.

அதாவது, மனோபாலாவின் குடும்ப வழக்கப்படி, ஒருவர் உயிரிழந்துவிட்டால், அவரது உடமைகள் அனைத்தும், தீயில் எரிக்கப்படும். ஆனால், மனோபாலாவின் உடைமைகள் அனைத்தும், ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த நெட்டிசன்கள், மனோபாலாவின் குடும்பத்தினரை பாராட்டி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News