Connect with us

RajNewsTamil

“இன்றும் ஐ.பி.எல் போட்டி நடக்கலைனா..,” – வெளியான அதிர்ச்சி தகவல்! சோகத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள்!

விளையாட்டு

“இன்றும் ஐ.பி.எல் போட்டி நடக்கலைனா..,” – வெளியான அதிர்ச்சி தகவல்! சோகத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள்!

ஐ.பி.எல் போட்டியின் இறுதிப் போட்டி, நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற இருந்தது. இந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருந்தன.

ஆனால், அகமதாபாத் மைதானத்தில் ஏற்பட்ட மழை காரணமாக, போட்டி தொடங்குவதற்கு முன்பே நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், 9.30 மணிக்குள் போட்டி நடைபெறுவதாக இருந்தால், முழு ஓவர்கள் வீசப்படும் என்றும், இரவு 12.30 மணிக்குள்ளாக போட்டி தொடங்குவதாக இருந்தால், 5 ஓவர்கள் மட்டும் வீசப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், கடைசி வரை மழை நிற்காததால், அடுத்த நாள் இரவு 6.30 மணிக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது புதிய அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

அதாவது, இன்றும் மழை காரணமாக போட்டி நடைபெறாமல் போனால், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி வெற்றி பெற்றதாக, அறிவிக்கப்பட்டுவிடுமாம். இந்த தகவலை அறிந்த சி.எஸ்.கே ரசிகர்கள், கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a commentLogin

Leave a Reply

More in விளையாட்டு

To Top