Connect with us

Raj News Tamil

“கைல வந்த கேட்ச்ச விட்டுட்டியோ டா” – ஆட்டோகிராஃப் கேட்ட தீபக் சாஹர்.. விளையாட்டாக மறுத்த தோனி!

விளையாட்டு

“கைல வந்த கேட்ச்ச விட்டுட்டியோ டா” – ஆட்டோகிராஃப் கேட்ட தீபக் சாஹர்.. விளையாட்டாக மறுத்த தோனி!

2023-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியின் இறுதிச்சுற்று, நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்கத்தின்போது, அதிரடி ஆட்டக்காரரான சுப்மன் கில் அடித்த பந்தை, தீபக் சஹார் பிடிக்க முடியாமல், கேட்சை மிஸ் செய்திருப்பார்.

இது சென்னை அணிக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கும். ஆனால், கடைசியில், தோனியின் அசுர வேக ஸ்டெம்பிங்கில், அவர் ஆட்டம் இழந்திருப்பார். இறுதியில் சிறப்பாக விளையாடி, சி.எஸ்.கே அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது.

ஆட்டம் முடிந்து அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தீபக் சஹார் தோனியிடம் ஆட்டோகிராஃப் போடும்படி கேட்டிருந்தார். இதற்கு மறுப்பு சொன்ன தோனி, “கையில் வந்த பாலை பிடிக்காமல் விட்டுட்டான்” என்பது போல், அருகில் இருந்தவர்களிடம் விளையாட்டாக கூறுகிறார்.

இதையடுத்து, மீண்டும் தீபக் சஹார் கேட்க, அதற்கு தோனி தனது ஆட்டோகிராஃப்பை போடுகிறார். தோனியின் இந்த குறும்புத்தனமான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in விளையாட்டு

To Top