Connect with us

Raj News Tamil

கள்ள உறவு.. தட்டிக் கேட்ட தந்தையை எரித்தே கொன்ற மகள்.. தேடி வந்து மகளை கொன்ற சித்தப்பா..

தமிழகம்

கள்ள உறவு.. தட்டிக் கேட்ட தந்தையை எரித்தே கொன்ற மகள்.. தேடி வந்து மகளை கொன்ற சித்தப்பா..

ராமநாதபுரம் மாவட்டம் காவனூர் அருகே உள்ள ஆசாரி மடம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. 26 வயதாகும் இவர், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, விவாகரத்து பெற்றிருந்தார்.

இதையடுத்து, தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த அவர் வசித்து வந்தார். இந்நிலையில், பவித்ராவிற்கும், டிரைவர் வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பவித்ராவின் தந்தை ரவி, தனது மகளை கடுமையாக கண்டித்துள்ளார்.

இருப்பினும், டிரைவர் உடனான உறவை, அவர் கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. தந்தை தொடர்ந்து கண்டித்து வந்ததால், ஆத்திரம் அடைந்த பவித்ரா, தனது தந்தையை பெட்ரோல் ஊற்றி, எரித்துக் கொலை செய்தார். இதுதொடர்பான வழக்கில், சிறைக்கு சென்ற அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

வெளியே வந்து சில மாதங்களுக்கு பிறகு, வேறொரு நபருடன் கள்ள உறவில் அவர் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கண்டிப்பதற்காக, பவித்ராவின் வீட்டிற்கு, அவரது சித்தப்பா முருகேசன், தம்பி மணிகண்டன் உட்பட 3 பேர் வந்துள்ளனர்.

அப்போது, பவித்ராவிற்கும், அவரது சித்தப்பா முருகேசன், தம்பி மணிகண்டன் ஆகியோருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மணிகண்டனை கைது செய்தனர். மேலும், கொலை நடந்த சமயத்தில் அங்கிருந்த தப்பியோடிய முருகேசனும், இன்னொரு இளைஞனும், தற்போது, காவல்துறையில் சரண் அடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top