Connect with us

Raj News Tamil

அரசு பேருந்து மீது, தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து

இந்தியா

அரசு பேருந்து மீது, தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது, தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனருக்கு கால் முறிந்தது. 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கரூர் வழியாக, திண்டுக்கல் வரை செல்லும் அரசு பேருந்து, கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது, அப்போது பெங்களூரில் இருந்து கரூரை நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து, அரசு பேருந்துடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன் பகுதி மற்றும் அரசு பேருந்து பின் பகுதி அப்பளமாக நொறுங்கின. ஆம்னி பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் பாண்டியன் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

மேலும், அரசு பேருந்தில் பயணம் செய்த ஐந்து பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top