Connect with us

சென்னையில் விடிய விடிய கனமழை… பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

வானிலை

சென்னையில் விடிய விடிய கனமழை… பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்குன்றம், சோழவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையின் மத்தியப் பகுதிகளான நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கே.கே.நகர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முழுக்க இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in வானிலை

To Top