மின்சாரம் தாக்கி விவசாயி பலி!

பேரையூர் அருகே, மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர், சௌந்திர பாண்டியன் என்பவரது தோட்டத்திற்கு, விவசாய பணிக்காக சென்றுள்ளார்.

அப்போது, அந்த தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல், அதனை மிதித்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சின்னத்தம்பியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News