சினிமா
மாரி செல்வராஜின் அடுத்த ஹீரோ அவர் தான்? இவர் இல்லை?
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், தற்போது, உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து, மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு, கலையரசன் நடிப்பில், புதிய படம் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, துருவ் விக்ரமை வைத்து தான், அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார்.
கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இந்த படத்தை, இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளார். உதயநிதி படத்திற்கு முன்னரே இந்த கூட்டணி இணைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login