கோயம்பேட்டில் முகத்தில் காயங்களுடன் ஆண் சடலம் – போலீஸ் விசாரணை

கோயம்பேடு பகுதியில் உள்ள காலி இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இறந்து போன நபருக்கு சுமார் 50 வயது இருக்கும் எனவும் குடிபோதையில் வந்ததால் கால் தடுமாறி கீழே விழுந்ததில் கற்கள் முகத்தில் குத்தி இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

அவர் தவறி விழுந்து முகத்தில் அடிபட்டு இறந்தாரா அல்லது மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News