Connect with us

பாஜகவை வீழ்த்த ஐடியா கொடுத்த பிரசாந்த் கிஷோர்!

அரசியல்

பாஜகவை வீழ்த்த ஐடியா கொடுத்த பிரசாந்த் கிஷோர்!

2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த கூட்டணி கணக்கு மட்டும் போதாது என்று தோ்தல் வியூக வகுப்பாளராக இருந்து சமூக ஆா்வலராக மாறியுள்ள பிரசாந்த் கிஷோர் கூறினார்.

பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி:

ஆளும் கட்சிக்கு எதிராக மக்களைத் திருப்பும் வகையில் சிறந்த கருத்தாக்கத்தை உருவாக்குவதில்தான் எதிர்க் கட்சி கூட்டணியின் வெற்றி உள்ளது. ஏனெனில், நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட பின்னணியில்தான் ஜனதா கட்சி உருவானது. மாபெரும் மக்கள் இயக்கத்தை சுதந்திரப் போராட்ட வீரா் ஜெயபிரகாஷ் நாராயண் நடத்தினார். இந்திய அரசியலில் புதிய மாற்றம் உருவானது. அதுபோல, வி.பி.சிங் ஆட்சியின்போது, போபா்ஸ் ஊழல் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

எனவே, ஆளும் கட்சிக்கு எதிராக விமா்சனங்களை முன்வைக்கும் வகையில் சிறந்த கதையை உருவாக்காமல், வெறும் கூட்டணி கணக்கு மட்டும், மக்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியாது என்றார் பிரசாந்த் கிஷோர்.

More in அரசியல்

To Top