Connect with us

காவல்நிலையத்தில் மனித மண்டை ஓடு.. பில்லி சூனியம் வைத்த மர்ம நபர்.. பீதியில் பொதுமக்கள்..

தமிழகம்

காவல்நிலையத்தில் மனித மண்டை ஓடு.. பில்லி சூனியம் வைத்த மர்ம நபர்.. பீதியில் பொதுமக்கள்..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே, போக்குவரத்து காவல்நிலையம் இயங்கி வருகிறது.

விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இங்கு தான் நிறுத்தி வைக்கப்படும்.

இந்நிலையில், இந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது, மனிதன் மண்டை ஓடு, அரிசி, மஞ்சள் நிற பை ஆகியவை அங்கு கிடந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த மண்டை ஓட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மனித மண்டை போக்குவரத்து காவல்நிலையத்தில் இருந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

More in தமிழகம்

To Top