Connect with us

மழைத்துளிகளால் மகிழ்ச்சியான சென்னை வாசிகள் !

வானிலை

மழைத்துளிகளால் மகிழ்ச்சியான சென்னை வாசிகள் !

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் பொதுவான மேகமூட்டம் காணப்படும் என்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அண்ணா நகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை ,ஐஸ் ஹவுஸ், தியாகராயர் நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்த மழையின் காரணமாக , சூடுகள் தணிந்து குளிர்ச்சி நிலை நிலவியதால் மக்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in வானிலை

To Top