ஆசிட் ஊற்றிய ஆட்டோ டிரைவர் ! முகநூல் காதலால் வந்த விபரீதம் !

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம்   ஐதாவரம் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதம்மா.இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். 

கணவர் இறந்து விட்டதால்  தனது  சகோதரியின்  வீட்டின்  அருகே  வசித்து வந்தார். இந்நிலையில்  திருப்பதம்மா ,நெல்லூரை  சேர்ந்த ஆட்டோ டிரைவரிடம்  முகநூல் மூலம்  நட்பாக  பழகியுள்ளார் . 8 மாத காலமாக ஒருவரை  ஒருவர்  காதலித்து வந்தனர். 

 அப்போது , மணிசிங்  திருப்பதம்மாவின்  வீட்டிற்கு  சென்று  நெருங்கி  பழகி  வந்தார். சமீபத்தில் ,மணிசிங்கிற்கு  காசநோய்  இருப்பது தெரியவந்தது. இதனால்  அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார், கோபம்  கொண்ட மணிசிங்  அவரது வீட்டிற்கு  சென்று  உணவு  அருந்திவிட்டு  உறங்கியுள்ளார்.

அதிகாலை, 4 மணியளவில்  ஆசிட்டை  திருப்பதம்மாவின்  மேல்  ஊற்றிவிட்டு ,ஓடியுள்ளார்.கதறி அலறிய  சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்,

 அரசு  மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர்,மேல்  சிகிச்சைகாக  தற்போது ஆந்திரா  அரசு  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வழக்கு  பதிவு செய்து காவல்  துறையினர்   தப்பி ஓடிய   மணிசிங்கை  தேடி வந்த நிலையில், சில மணி நேரங்களில்  விஜயவாடா பேருந்து  நிலையத்தில்  ,மணி சிங்கை  கைது செய்தனர்.  

RELATED ARTICLES

Recent News