ஒடிசாவில் புது வித முயற்சியாக otv என்னும் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கியுள்ளனர் .கடந்த ஞாயிறன்று இச்செய்தி வாசிப்பு அறிமுகம் நடந்தது.
ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறி சேலையை கட்டிக்கொண்டு ,பன் மொழிகளில் செய்தி வாசிக்கும் திறனில் லிசா வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது . தொடர் வேலைகளுக்கு உதவியாகவும் , அதிகமான தரவுகளை ஆய்வு செய்வதற்கும் லிசா தொழில் நுட்பம் முன்னிலை வகிக்கிறது . இது ஊடகத்தின் ஒரு மைல் கல் வளர்ச்சி என்று,தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் ஜகி மங்கட் பாண்டா தெரிவித்துள்ளார்.