Connect with us

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 26 வரை நீட்டிப்பு!

அரசியல்

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 26 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி ஜூன் 14 கைது செய்யப்பட்டார். முதலில் ஜூன் 28 வரையிலும், பின்னர் ஜூலை 12 (இன்று) வரையிலும் நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், 2வது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More in அரசியல்

To Top