வள்ளியூர் ரயில்வே நிலையம் அருகே, அடையாளம் தெரியாமல் கிடந்த ஆண் சடலம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் ரயில்வே நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்த நபர் யார் என்றும், அவரது உயிரிழப்புக்கு காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.