தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் போஷம் என்ற நபர் தனது மனைவியிடம் கோழி குழம்பு வைக்கும்படி கோழிக்கறி கொடுத்துள்ளார். ஆனால் அவருடைய மனைவி கோழி குழம்பு வைக்காமல் கத்திரிக்காய் குழம்பு வைத்துள்ளார்.
இதனால், மதுபோதையில் போஷம் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இரவு இருவரும் தங்கள் அறையில் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலையில் வீட்டில் இருந்த கோடாரியால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை வெட்டிக்கொன்றார்.
இதில் அந்த பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய போஷமை தீவிரமாக தேடி வருகின்றனர்.