மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது : எங்கள் கிராமத்தை தாக்கும் போது போலீசாரும் அங்கு இருந்தனர்.
எங்களை அக்கும்பலிடம் விட்டுசென்றதே போலீசார்தான் என கூறியுள்ளார். மேலும் அக்கும்பலில் என் சகோதரனின் நண்பன் உள்பட ஒரு சிலரை என்னால் அடையாளம் காட்ட முடியும் என கூறியுள்ளார்.