இந்தியன் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன் – பாஜக எம்.பி வேதனை

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. எம்.பி.யுமான கம்பீர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூர் சம்பவம் குறித்து வேதனையுடன் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது. ஆனால் இது மாநிலம் சார்ந்த சம்பவம் அல்ல. முழு நாட்டிற்கும் அவமானம்.

ஒரு இந்தியனாக நாம் அவமானத்தில் தலை குனிய வேண்டும். என்னை ஒரு இந்தியன் என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட்கப்படுகிறேன். மணிப்பூரில் நடந்த சம்பவம் போல் எதிர்காலத்தில் எந்த மாநிலத்திலும் நடக்கக்கூடாது” என தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News