இன்ஸ்டா ரீல்ஸை பார்த்ததால் ஆத்திரம்! கணவனின் பிறப்புறுப்பை அறுத்த இரண்டாவது மனைவி!

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் என்டிஆர் மாவட்டம் முப்பலா கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா ஆனந்த்பாபு. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்தார். இந்நிலையில், வீரம்மா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ஆனந்த் பாபுவும் , வீரம்மாவும் முப்பலா கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை ஆனந்த்பாபு தனது முதல் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து ரசித்ததாக தெரியவருகிறது .அதன்படி தனது கணவன் முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்து ரசிப்பதை கண்டு இரண்டாவது மனைவி வீரம்மா அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக வீரம்மா கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த வீரம்மா தனது கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ள தாக்க தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த்பாபு அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ,இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.கணவனின் பிறப்புறுப்பை அறுத்த இச்சம்பவமானது ஆந்திரா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News