பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர்…மணிப்பூரில் தொடரும் கொடூரம்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை வெடித்து வருகிறது. அங்கு பழங்குடி இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கொடுமை படுத்திய வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.

முன்பு மணிப்பூரில் இணையம் முடங்கியிருந்த நிலையில், தற்போது சற்று இணைய சேவைகள் திரும்பியுள்ளதால் பல்வேறு தகவல்கள் வெளிவர தொடங்கியிருக்கின்றன.

இந்நிலையில், மணிப்பூரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் ஒருவர் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த வீரரை இடைநீக்கம் செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஜூலை 20ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகவும், துணை ராணுவப் படைக்கு புகார் வந்ததையடுத்து, குற்றச்சாட்டு சரிபார்க்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து, அந்த வீரர் அன்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News