சினிமா பாணியில் போலி ரெய்டு….36 லட்ச ரூபாயை அபேஸ் செய்த கும்பல்

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் போலியாக ரெய்டுகளை நடத்தி மோசடி நபர்களிடம் இருந்து சூர்யாவின் டீம் பணத்தை எடுத்துக்கொண்டு செல்வார்கள். இதே போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடத்துள்ளது.

மும்பையில் கண்டிலால் யாதவ் என்பவர் பொதுப் பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சொந்தமான வீட்டில் 6 பேரை கொண்ட திருடர்கள் கும்பல், மும்பை போலீசின் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ரூ. 25.25 லட்சம் ரொக்கப் பணம், தங்க மோதிரம், செயின், பிரேஸ் லெட், வைரம், வைரம் பொறிக்கப்பட்ட தாலி, வாட்சுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியது. ரொக்கப் பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 36 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வந்த வேலை முடிந்ததும் அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றது. திரைப்பட பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News