Connect with us

செந்தில்பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தமிழகம்

செந்தில்பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!

அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உள்பட கரூரில் 4 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

இந்நிலையில், கரூரில் இன்று காலை அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் வீட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், கரூரில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.

மத்திய துணை ராணுவப் படையின் பாதுகாப்போடு சோதனை நடைபெற்று வருவதால், கரூரில் பரபரப்பு நிலவுகிறது.

More in தமிழகம்

To Top