அரசியல்
தமிழகத்திற்கும், ராமருக்கும் தொடர்பு… விரைவில் கருத்தரங்க கூட்டம் உ.பி முதல்வர்..!
உத்திரபிரதேசத்தில் 2-வது முறையாக முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலை தீவிரமாக கவனித்துவரும் இவர், ராமருக்கும், தமிழகத்திற்குமான தொடர்பு குறித்து 2023-ஆம் ஆண்டு கருத்தரங்கம் ஒன்றை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் தொன்மையான ஹிந்து மத தலைவர்கள், ஆதினங்களை போன்ற தலைவர்களை அழைக்க திட்டமிட்டுள்ள யோகி, விரைவில் அதற்கான கடிதங்களை எழுத உள்ளதாக உபி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
You must be logged in to post a comment Login