ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

நேற்று தெற்கு காஷ்மீா், குல்காம் மாவட்டத்தில் ஹலான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் வீரா்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது வீரா்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட, வீரா்கள் எதிர்த்தாக்குதலைத் தொடங்கினா்.

பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 3 வீரா்கள் காயமடைந்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்கள், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து, கூடுதல் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அப்பகுதி முழுவதம் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

RELATED ARTICLES

Recent News