சந்திராயன் 3- ன் அப்டேட் ! நிலாவின் சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை குறைக்கும் பணி வெற்றி!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்ததாக தகவல் வெளிவந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவை சுற்றத் தொடங்கியது.

சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான்- 3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் , இஸ்ரோ சந்திரயான் 3 எடுத்த நிலவின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. புவி சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு மாறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இதுவாகும்.

இந்நிலையில், சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் முதல் கட்ட பணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் அருகே சென்றுள்ளது. சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் பணி வரும் 9-ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News