மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திய பிரதமர் மோடிக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைத்திட தனியார் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
புனே அருகே உள்ள லவாசா சுற்றுலா தளத்தில், பிரதமர் மோடிக்கு உலகிலேயே உயரமான சிலை அமைக்க டார்வின் பிளாட்பார்ம் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் லிமிடெட் ( Darwin Platform Infrastructure Ltd) என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுவரை , குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள படேல் சிலை தான் உலகத்திலேயே அதிக உயரம் கொண்ட சிலையாக உள்ளது. இச்சிலையானது ,182 மீட்டர் உயரம் கொண்டதாகும் இன்னும் உயரமாக பிரதமர் மோடிக்கு 190லிருந்து 200 மீட்டர் வரையில் உயரம் கொண்டதாக சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2023 இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு சிலையைத் திறக்க இந்த நிறுவனம் திட்டமிட்டு பணிகளை துவங்கியுள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பிரதமர் மோடி செய்து வரும் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவருக்கு உலகின் மிக உயரமான சிலை அமைக்கவுள்ளோம் என டி பி ஐ எல் நிறுவனத் தலைவர் அஜய் ஹரிநாத் சிங் தெரிவித்துள்ளார்.