காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

ஜார்க்கண்ட், திரிபுரா, கேரளா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 10-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News