ஓடும் ரயிலில் சிகரெட் பற்ற வைத்த ஓசி பயணி…ரயிலுக்குல் புகை கிளம்பியதால் பரபரப்பு

திருப்பதியில் இருந்து கிளம்பிய இந்த வந்தே பாரத் ரயில் செகந்திராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது டிக்கெட் எடுக்காமல் ஆசாமி ஒருவர் ரயிலுக்குள்ளே ஏறி உள்ளார். டிக்கெட் பரிசோதகரிடம் சிக்காமல் இருப்பதற்காக அவர் ரயிலில் உள்ள கழிவறையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

நீண்ட நேரம் கழிவறையில் பயணம் செய்த அவர் தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சிகரெட்டை எடுத்து பத்த வைத்துள்ளார். சிகரெட்டில் இருந்து வெளியான புகை ரயிலுக்குள் உள்ள பயணிகள் அமரும் இடத்திற்கு பரவியது.

புகை ரயில் முழுவதும் பரவியதால் எச்சரிக்கை கருவி உடனடியாக ஒலிக்க துவங்கியது. மேலும் ரயிலில் உள்ள நீர் தெளிப்பான்கள் எல்லாம் செயல்பட்டு ரயில் முழுவதும் தானாக நீர் தெளிக்க துவங்கியது. இதை கண்ட அச்சம் அடைந்த பயணிகள் அங்கு இங்கும் ஓடினார்.

இதையடுத்து ரயில்வே போலீசார் புகை வந்த ரயில் பெட்டிக்குள் உள்ளே நுழைந்து அங்கே பாத்ரூம் உள்ளே இருந்த சிகரெட் குடித்த ஆசாமியை கைது செய்து நெல்லூர் சிறையில் அடைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வந்து ரயிலில் சூழ்ந்த புகையை வெளியேற்றினர். மேலும் புகை உடனடியாக வெளியேற ரயிலின் உள்ளே இருந்து ரயிலின் கண்ணாடி உடைக்கப்பட்டு புகையை வெளியே அனுப்பும் முயற்சியும் நடந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News