Connect with us

எருமை மாடுகளை திருட முயன்றதாக சந்தேகப்பட்டு ஒருவர் அடித்தே கொலை!

இந்தியா

எருமை மாடுகளை திருட முயன்றதாக சந்தேகப்பட்டு ஒருவர் அடித்தே கொலை!

அசாம் மாநிலத்தில் 2 எருமை மாடுகளைத் திருட முயன்றதாக சந்தேகப்பட்டு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

அசாமில் உள்ள ஹோஜாய் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 எருமை மாடுகளைத் திருட முயன்றதாக சந்தேகப்பட்டு ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கினர்.

இதனால் படுகாயமடைந்த அந்த நபரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் ஹோஜாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஃப்சுர் ரஹ்மான்(40) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட ஹிஃப்சுர் ரஹ்மான் குடும்பத்தினர் போலீசில் நேற்று மாலை புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரின் போலீசார் 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எருமை மாடுகளைத் திருட முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top