வேலைக்கு அழைக்கிறது இந்திய அஞ்சல் துறை ! 30,041 காலி பணியிடங்கள்..!

அஞ்சல் துறையில் கிராமின் டக் சேவக்ஸ் காலியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில்,அதற்காக விண்ணப்பிக்க 23 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக தான் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடந்த மூன்றாம் தேதி முதல் இம்மாதம் 23 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது இதற்கான கடைசி தேதி 23.08.2023 ஆகும்.

இதனைத்தொடர்ந்து இதற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். 18 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 12 ஆயிரத்திலிருந்து 29,380 ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும்
என்று தெரிவிக்கப்படுள்ளது.

RELATED ARTICLES

Recent News