Connect with us

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை..!!

வானிலை

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை..!!

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்தது. சென்னை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

More in வானிலை

To Top