விஜய் மகனுக்கு உதவியாக மாறிய அஜித்? செம அப்டேட்!

நடிகர் விஜயின் மகன் ஜோசன் சஞ்சய், வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வந்தார். இந்த படிப்பை முடித்தவுடன் சினிமாவில் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு சில நடிகர்களும், இயக்குநர்களும் தொடர்ந்து பல்வேறு கதைகளை கேட்டு வந்தனர். இவ்வாறு அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தற்போது வீணாகியுள்ளது.

அதாவது, இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு பதில், இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம். இதற்காக கதை ஒன்றை தயார் செய்திருந்த ஜோசன் சஞ்சய், லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரனிடம் கூறியுள்ளார்.

இந்த கதை, அவருக்கு பிடித்துவிட்டதால், ப்ராஜக்ட் விரைவில் தொடங்கப்பட உள்ளதாம். மேலும், அஜித்தின் நண்பரும், மேனேஜருமான சுரேஷ் சந்திரா தான், இப்படத்திற்கு பி.ஆர்.ஓ-வாக செயல்பட உள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News