சாலையில் நடந்து சென்ற பெண்ணை மாடு ஒன்று கொடூரமாக தாக்கும் சம்பவம் அகமதாபாத்தில் நிகழ்ந்திருக்கிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டம் நரடா என்ற இடத்தில் மேய்ச்சலுக்காக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தது , அப்போது சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் மாடுகளைப் பார்த்து அந்த பெண் சாலை ஓரத்தில் ஒதுங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் நடந்து வந்த மாடுகளில் ஒன்று அந்த பெண்ணை குத்தி தூக்கி சாலையில் வீசியது. இதில் அந்த பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மாட்டை விரட்டி பெண்ணை காப்பற்றியதாக தெரிகிறது.
இச்சம்பவத்திற்கு பிறகு உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் சென்னையில் பள்ளி மாணவி ஒருவரை மாடு மூட்டி தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்த நிலையில் அகமதாபாத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மீண்டும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.