இந்திய அணியின் ஒளிபரப்பு இனி அம்பானி நிறுவனத்திடம்! 5 ஆண்டுகளுக்கு உரிமம் பெற்ற வியாகாம் 18!

இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்திற்கான ஏலம் நடைபெற்றது. அதன்படி , அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை முகேஷ் அம்பானியின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.சி.சி.ஐ. சார்பில் உள்நாட்டில் நடத்தப்படும் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமைத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 963 கோடிகளை கொடுத்து கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது . இதில் ரூ. 3 ஆயிரத்து 101 கோடி டிஜிட்டல் உரிமத்திற்கு செலுத்துகிறது. அந்த வகையில் டிஜிட்டலில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான தொகை ரூ. 35 கோடியே 23 லட்சம் ஆகும். டி.வி.-யில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான தொகை ரூ. 32 கோடியே 52 லட்சம் ஆகும்.

RELATED ARTICLES

Recent News