மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல்வாதியுமான சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான சிபு சோரன் இன்று காலையில் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
சிபுசோரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் ஜார்க்கண்ட் முதல்வரும் சிபுசோரன் மகனுமான ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.