மகளிர் இடஒதுக்கீடு- நம் தேசத்தை உருவாக்கிய பெண்களுக்கு மரியாதை: பிரதமர் மோடி!

நம் தேசத்தை உருவாக்கிய எண்ணற்ற பெண்களுக்கு இது ஒரு மரியாதை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாநிலங்களவையில் நிறைவேறியது. முன்னதாக நேற்றுமுன்தினம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேறியது. ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது.

இந்நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு,

“நமது தேசத்தின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு முக்கியமான தருணம்! 140 கோடி இந்தியர்களுக்கு வாழ்த்துகள். மசோதாவுக்கு வாக்களித்த அனைத்து ராஜ்யசபா எம்.பி.க்களுக்கும் நன்றி. இத்தகைய ஒருமித்த ஆதரவு உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. இது வெறும் சட்டம் அல்ல; நம் தேசத்தை உருவாக்கிய எண்ணற்ற பெண்களுக்கு இது ஒரு மரியாதை. மகளிரின் பங்களிப்புகளால் இந்தியா வளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்களில் நம் தேசத்தின் அனைத்து பெண்களின் வலிமை, தைரியம் மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மை ஆகியவற்றை நினைவுபடுத்துவோம். அவர்களின் குரல்கள் இன்னும் திறம்படக் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்கான வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News