மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள பிரபலமான ஹீரா பன்னா வணிக வளாகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது.
தீ பரவிய தகவல் அறிந்தவுடன் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ், 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினரும்,காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
வணிக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்று ஓஷிவாரா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்போது இது சாா்ந்த காணொளியானது ,வைரலாக பரவி வருகிறது.