Connect with us

சிவகார்த்திகேயனுக்கு செட் ஆகாத வேடம்.. மீண்டும் கையில் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

சினிமா

சிவகார்த்திகேயனுக்கு செட் ஆகாத வேடம்.. மீண்டும் கையில் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

மாவீரன் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு, இவரது நடிப்பில் அயலான் என்ற படம் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில், அவர் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில், நடிகை மிருனாள் தாக்கூர் தான், எஸ்.கே.வுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இந்நிலையில், இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு என்ன வேடம் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில் காவல் அதிகாரி வேடத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாராம். மேலும், இந்த திரைப்படம், துப்பாக்கி படம் அளவிற்கு அழுத்தமாக உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால், ஏற்கனவே சிவகார்த்திகேயன் காவல் அதிகாரியாக நடித்திருந்த காக்கி சட்டை திரைப்படம், தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top