இத்தனையும் வயிற்றில் இருந்ததா ! 2 வருடங்களாக உலோகங்களை முழுங்கிய வினோத நபர் !

பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது மோகா நகரம். இங்கு வசிக்கும் சுமார் 40 வயததை சாா்ந்த ஒருவா் பல மாதங்களாக வயிற்று வலியினால் அவதிபட்டு வந்துள்ளாா். அவரது உறவினர்கள் அவரை பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றும் பலன் கிடைக்கவில்லை.

சில நாட்களுக்கு முன் அவருக்கு கடும் காய்ச்சலுடன் வயிற்று வலி அதிகரித்தது. அதனுடன் 2 நாட்களாக குமட்டல் வேறு இருந்து வந்தது. அவரால் சரியாக உறங்க முடியவில்லை. இதனையடுத்து, சில தினங்களுக்கு முன்பு, மோகா நகரின் பர்னாலா அம்ரித்சர் பைபாஸ் சாலையிலுள்ள மெடிசிட்டி மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அவரை கொண்டு சென்றுள்ளனா். மருத்துவர்களின் முதல்நிலை சிகிச்சையில் பலன் இல்லாததால் அவரது வயிற்று பகுதியை எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்ய முடிவு செய்தனா்.

ஸ்கேன் செய்யப்பட்டதில் அவரது வயிற்றில் பல உலோக பொருட்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை நீக்க உடனடியாக ஒரு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் மருத்துவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயிற்றில் ஒரு சிறு உலோக கிடங்கே இருந்தது. வெளியில் எடுக்கப்பட்ட உலோக பொருட்களில் சில, நட்டு , போல்ட், வயர், ராக்கி, இயர்போன், வாஷர், லாக்கெட், பொத்தான் மற்றும் சிறு உறை, தலைமுடிக்கான க்ளிப், ஜிப், கோளி குண்டு மற்றும் ஊக்கு ஆகியவை. இவ்வளவு பொருட்களை கண்ட அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர் . அந்த நோயாளிக்கு ஓரளவு மனநோய் இருப்பதாக தெரிவித்த அவரது உறவினர்களுக்கு கூட எப்போது எவ்வாறு அந்த நோயாளி அவற்றை உட்கொண்டார் என்பது தெரியவில்லை.

இவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர். அஜ்மெர் கால்ரா “இது போன்ற ஒரு வழக்கை இப்போதுதான் முதல்முறையாக நாங்கள் காண்கிறோம். சுமார் 2 வருடங்களாக வயிற்று வலியால் அந்த நோயாளி அவதிப்பட்டுள்ளார். அனைத்து பொருட்களையும் நாங்கள் வெளியில் எடுத்து விட்டோம். நோயாளி இன்னமும் சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை இன்னமும் சீராகவில்லை. அத்தனை பொருட்களும் நீண்ட காலமாக அவர் வயிற்றிலேயே இருந்ததால், அவருக்கு பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில காலம் அவருக்கு சிகிச்சை தேவைப்படும்”என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News