பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் படுகொலை!

பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவன் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜீவா கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

இந்நிலையில் முன்விரோதம் காரணமாக புளியங்குடியைச் சேர்ந்த நபர், மாணவனை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.

ஜீவாவின் உடல் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பியோடிய கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News