மகளிர் வில்வித்தை குழுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!

வில்வித்தை மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி, சீனா-தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் வில்வித்தை மகளிர் குழுப் போட்டியில் இந்தியா சார்பில் ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பிரணித் கௌர் ஆகியோர் குழு (நேற்று) வியாழக்கிழமை பங்கேற்றது.

சீன தைபே அணிக்கு எதிரான போட்டியில் 230 புள்ளிகள் பெற்று இந்திய மகளிர் அணியினர் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினர்.

RELATED ARTICLES

Recent News